குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை

வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்து வெயிலடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு சாதாரணமாக சிறு தூறலுடன் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் தீவிரமடைந்தது. நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை விடிய விடிய கனமழை கொட்டியது.
சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், வேளச்சேரி, உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியதால் வெள்ளம் நீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே குண்டும் குழியுமாக மாறியிருந்த சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டனர்.
புதிய காற்றழுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில், உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் மழை விட்டு விட்டு பெய்யும் என்று ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications