கேரள அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்!- இளங்கோவன் பேச்சு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம்- முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்கக் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கல் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுனர்.
கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.
அவர் பேசுகையில், "இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை. 1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இப்படி குறைக்கப்பட்டது. எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
அங்கு ஆட்சி நடத்தும் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள். எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். 'டிஸ்மிஸ்' செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல. மேடையில் இருக்கிற மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.
தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்வராக உட்கார வைக்க கூடாது. டெல்லிக்கு வா என்று அழைத்துக் கொள்ள வேண்டும்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற இதை சோனியா காந்தி செய்தே தீர வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கூடங்குளம் பிரச்சினை தானாக உருவான பிரச்சினை அல்ல. சிலரால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. எனவே இந்த பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்து மக்களுக்கு விளக்க வேண்டும்," என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications