தமிழர்கள் மீது தொடர் தாக்குதல்-கேரளாவுக்கான வர்த்தகத்தை நிறுத்தும் நெல்லை, தூத்துக்குடி வியாபாரிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழர்கள் மீதும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீதும் கேரளாவில் மலையாளிகள் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கி வருவதால் ஆவேசமடைந்துள்ள தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வர்த்தர்கள், கேரளாவுடனான தங்களது வர்த்தக தொடர்புகளை நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையை கிட்டத்தட்ட இனப் பிரச்சினை போல மாற்றி விட்டனர் மலையாளிகள். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் சென்றாலும் தாக்குகின்றனர். அப்பாவி ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் விடவில்லை. செருப்பு மாலை போட்டும், அசிங்கமாக பேசியும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும், உங்களுக்குத்தான் முருகன் இருக்கானே அங்கு போக வேண்டியதுதானே என்று கேவலமாக பேசியும் அவமானப்படுத்தி தாக்கி வருகின்றனர்.

இந்தத் தொடர் தாக்குதல்களால் கோபமடைந்துள்ள பல்வேறு தரப்பினரும் தமிழகத்தில் பதில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி வர்த்தகர்கள், கேரளாவுடனான தங்களது வர்த்தக தொடர்புகளை நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.

தமிழகத்திலிருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள், வேன்கள் என எது சென்றாலும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை நிலவுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

நிலைமை சரியாகும் வரை அனைத்து வர்த்தக ஏற்றுமதியையும் நிறுத்தி வைப்பது என்றும், நிலைமை சரியான பின்னர் அதுகுறித்துப் பரிசீலிப்பது என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர்.

இதனால் இதுவரை தேனி மாவட்டம் வழியாக மட்டுமே தடைபட்டுள்ள கேரளாவுக்கான பொருள் ஏற்றுமதி, இனி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+