For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனுமதி பெறாமல் போராட்டம்– கூடங்குளம் போராட்டக்குழு மீது 115 வழக்குகள்

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவினர் மீது இதுவரை 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெறுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. உரிய அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடப்பதால் உடனுக்குடன் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். வழக்குகள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி அணு மின் நிலைய எதிர்ப்பு குழு மீது கூடங்குளத்தில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nellai district police have filed 115 cases against anti Kudankulam nuclear plant protesters till date.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X