அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் திடீர் ரத்து: ஜெயலலிதா அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 4.12.2011 அன்று வெளிவந்துள்ள அறிவிப்பு எண்கள் 322, 323/20​11ன் படி திருநெல்வேலி புறநகர் தெற்கு, திண்டுக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் ரத்து செய்யப்படுகின்றது.

அதே போல, கடந்த 17.12.2011 அன்று வெளிவந்துள்ள அறிவிப்பு எண்கள் 332, 333, 334/ 2011ன் படி காஞ்சிபுரம், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் ரத்து செய்யப்படுகின்றது.

ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து அதே பொறுப்புகளில் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+