அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் திடீர் ரத்து: ஜெயலலிதா அதிரடி
சென்னை: காஞ்சிபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 4.12.2011 அன்று வெளிவந்துள்ள அறிவிப்பு எண்கள் 322, 323/2011ன் படி திருநெல்வேலி புறநகர் தெற்கு, திண்டுக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் ரத்து செய்யப்படுகின்றது.
அதே போல, கடந்த 17.12.2011 அன்று வெளிவந்துள்ள அறிவிப்பு எண்கள் 332, 333, 334/ 2011ன் படி காஞ்சிபுரம், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் ரத்து செய்யப்படுகின்றது.
ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து அதே பொறுப்புகளில் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.