வங்க கடலில் குறைந்தழுந்த தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவ மழையின் அளவை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை ஏறக்குறைய 43 செ.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பெய்து உள்ள மழை அளவு 50 செ.மீட்டரை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு துவங்கியதால், இனி மழை இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வளிமண்டல மேல் அடுக்கு காற்று சாதமாக உள்ளதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், மாநிலத்தின் வட பகுதிகளிலும் இன்று மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைப் பெய்யாது என்றார்.












Click it and Unblock the Notifications