22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜகதாபட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை 22 மீனவர்களை பிடித்துச் சென்று தங்கள் காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி கூறியதாவது,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது என்று எங்களுக்கு தகவல் வந்தது. உடனே இலங்கை கடலோரக் காவல்படையைத் தொடர்பு கொண்டு கேட்டோம். பிடித்துச் சென்றவர்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைபப்தாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களை இன்று ஒப்படைக்க முடியாது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+