ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்போக்கைக் கண்டித்து, இன்று தமிழக கேரள எல்லைப்புறங்களில் மதிமுக மற்றும் தமிழ் அமைப்புகளின் சார்பில் பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கந்தைகவுண்டன் சாலை, வாளையாறு, வேலந்தாவலம், பொள்ளாச்சி அருகே நடுப்புணி, வலந்தாயமரம், ஆனைக்கட்டி ஆகிய 6 இடங்களில் மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உக்கடம் பெருமாள் கோவில் மார்க்கெட், காந்திபுரம், சாய்பாபா காலனி காய்கறி மொத்த மார்க்கெட், ராஜவீதி தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
குனியமுத்தூர், கோவைபுதூர், போத்தனூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதுபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் கடையடைப்பு நடத்தப்படுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக லாரிகள் இயக்கப்படவில்லை. மினி ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை இயக்கப்படவில்லை.
ரயில் மூலம் கேரளா செல்லும் சரக்குகள்
கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றதால் கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஒரு பொருளும் போகவில்லை. மற்ற பகுதிகளிலும் கூட தடைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனை போக்கும் விதமாக கேரள வியாபாரிகள் பலரும் ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில்களின் மூலமாக காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை கேரளாவுக்கு எடுத்து செல்கிறார்கள்.
மலையாள அதிகாரிகள் ஒத்துழைப்பு
செவ்வாய்கிழமை முதல், பெங்களூர் - எர்ணாகுளம் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - கண்ணனூர் பாசஞ்சர், கோவை - பாலக்காடு பாசஞ்சர், மங்களூர் -கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை –திருச்சூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் சரக்குகளை அனுப்பி வருகிரார்கள்.
இதற்கு தமிழகத்தில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் மலையாள அதிகாரிகள் உறுதுணையாக இருந்து கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக, கண்ணனூர் கோவை பாசஞ்சரில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டன என்று கோவை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும்போது இந்த மார்க்கத்தில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரொம்பவே யோசிப்பார்கள் இந்த அதிகாரிகள். ஆனால் தற்போது காய்கறிகள் உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்காக கூடுதல் பெட்டிகளை இணைத்து தங்களது பேருதவியைப் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications