சென்னை விமான நிலையத்தில் ஐஸ் மிஸ்ஸான கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இந்தாண்டு சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏதோ காரணங்களால் முன்னதாகவே அங்கிருந்து புறப்பட வேண்டிய கிங்ஃபிஷர் விமானம் ஸ்பைஸ் ஜெட் தரையிறங்கும் நேரத்தில் அதே ஓடுதளத்தில் புறப்பட முயன்றது.
கிங்பிஷர் விமானம் புறப்பட முயல்வதைப் பார்த்த அதிகாரிகள் உடனே ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தரையிறங்க வேண்டாம் என்று தகவல் கொடுத்தனர். ஓடுதளம் காலியாகும் வரை வானில் வட்டமிடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி ஸ்பைஸ் ஜெட் விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானமும், ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதுவது மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications