பகுஜன் சமாஜ் எம்.பி.யைப் பிடித்து தள்ளிய பிரதமரின் பாதுகாவலர்: மன்னிப்பு கேட்ட பிரணாப்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி. ஒருவரைப் பிடித்து தள்ளியதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்னிப்பு கேட்டார்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ராம சங்கர் ராஜ்பாரை பிரதமரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தள்ளிவிட்டார். அவை துவங்கியதும் ஒரு எம்.பி.யை பிரதமரின் பாதுகாப்புக்கு வந்தவர் எப்படி தள்ளிவிடலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அந்த பாதுகாப்பு வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தாரா சிங் சவுகான் பேசியதாவது,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்ற பெயரில் எம்.பி.க்கள் அவமதிக்கப்படுகின்றனர். இது நாடாளுமன்றத்தையே அவமதிப்பகு போலாகும். நாடாளுமன்றத்தில் அனைவரும் சமமில்லையா என்றார். இதையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியவுடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்னிப்பு கேட்டு பேசியதாவது,
நடந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் அனைவரும் சமமம் என்று நீங்கள் கூறியது சரி தான். நான் பிரணாபாக பேசவில்லை. அரசுக்காக பேசுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications