அணுவிஞ்ஞானி பி.கே.ஐயங்கார் மரணம்: பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்

Subscribe to Oneindia Tamil

PK Iyengar
மும்பை: இந்தியா அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவரும் மிகச்சிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவருமான பி.கே. ஐயங்கார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80. பி.கே. ஐயங்காருக்கு, சீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அணுசக்தித்துறையில் பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்த ஐயங்கார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் பல்கலை.யில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

மும்பை பல்கலைகழகத்தில் 1963-ல் பி.எச்.டி. முடித்தார். கடந்த 1952-ல் மும்பை டாடா அணுஆராய்‌ச்சி மையத்தின் தனது வாழ்க்கை பயணத்தை துவக்கினார். கடந்த 1974-ம் ஆண்டு மே 18-ல் இந்தியா , ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் நடந்த முதல் அணுகுண்டு சோதனையில் இவரது பங்கு மகத்தானது.

கடந்த 1984-ம் ஆண்டில் பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் பணியாற்றி திறம்பட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியாவின் முதல் அணு உலையான பூர்ணிமா-1 ஐ வடிவமைத்தவரும் இவரே.

கேரளாவின் அறிவியல் ஆலோசகர்

கடந்த 1990-1993-ம் ஆண்டுகளில் அணுசக்தி கமிஷனின் தலைவராகவும், செயலராகவும் திறம்பட பணியாற்றினார். இயற்பியல் துறையில் சிறந்து விளங்கிய இவர் 1998-ம் ஆண்டுகளில் கேரள அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினர்.

அணுசக்தி துறையில் இவரது சிறந்த சேவையை பாராட்டி 1971-ல் பட்நாகர் விருதும், 1975-ல் பத்மபூசன் விருதும் வழங்கப்பட்டது. சிறிதுகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐயங்கார் தனது 80 வது வயதில் மும்பையில் உள்ள பிஏஆர்சி மருத்தவமனையில் காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+