அணுவிஞ்ஞானி பி.கே.ஐயங்கார் மரணம்: பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்

அணுசக்தித்துறையில் பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்த ஐயங்கார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் பல்கலை.யில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
மும்பை பல்கலைகழகத்தில் 1963-ல் பி.எச்.டி. முடித்தார். கடந்த 1952-ல் மும்பை டாடா அணுஆராய்ச்சி மையத்தின் தனது வாழ்க்கை பயணத்தை துவக்கினார். கடந்த 1974-ம் ஆண்டு மே 18-ல் இந்தியா , ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் நடந்த முதல் அணுகுண்டு சோதனையில் இவரது பங்கு மகத்தானது.
கடந்த 1984-ம் ஆண்டில் பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் பணியாற்றி திறம்பட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியாவின் முதல் அணு உலையான பூர்ணிமா-1 ஐ வடிவமைத்தவரும் இவரே.
கேரளாவின் அறிவியல் ஆலோசகர்
கடந்த 1990-1993-ம் ஆண்டுகளில் அணுசக்தி கமிஷனின் தலைவராகவும், செயலராகவும் திறம்பட பணியாற்றினார். இயற்பியல் துறையில் சிறந்து விளங்கிய இவர் 1998-ம் ஆண்டுகளில் கேரள அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினர்.
அணுசக்தி துறையில் இவரது சிறந்த சேவையை பாராட்டி 1971-ல் பட்நாகர் விருதும், 1975-ல் பத்மபூசன் விருதும் வழங்கப்பட்டது. சிறிதுகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐயங்கார் தனது 80 வது வயதில் மும்பையில் உள்ள பிஏஆர்சி மருத்தவமனையில் காலமானார்.












Click it and Unblock the Notifications