குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 60,000 மாணவிகளுக்கு கடிதம் எழுதிய கலெக்டர்!

இந்த நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லில்லி மாவட்டம் முழுவதும் உள்ள மாணவிகளுக்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார்.
அவரது கடித விவரம்:
அன்புள்ள மாணவச்செல்வங்களுக்கு,
இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை. இப்படி கிடைக்கவேண்டிய இந்த உரிமைகள் அனைத்தும், இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா...? குறிப்பாக இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா...? என்று பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது.
குடும்ப பாரம் சுமத்தப்படுகிறது
நமது மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள உன்னைப்போன்ற “பெண்” குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை அறிந்து வேதனை அடைகிறேன். சிறுவயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது. குழந்தையின் தலையில் குடும்பபாரம் சுமத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பாரத்தை உன்னைப்போன்ற ஒரு குழந்தையால் சுமக்கமுடியுமா...?
பாழாகும் எதிர்காலம்
படிக்கும் வயதில் திருமணம் நடந்தால் உன்னுடைய எதிர்காலம் எப்படி போகும் என்பதை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.... மாணவ மணிகளே. குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க கூடாது என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள்... முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள். இப்படி நீங்கள் பேசுவதால், உங்களுடைய ஊரில் நடக்கும் பல குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். குழந்தைக்கு திருமணம் செய்யக்கூடது” என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதனால், உன்னைப்போன்ற படிக்கும் குழந்தைகளின் திருமணம் இனிமேல் நடக்காது தடுத்து நிறுத்தப்படும்.
விழிப்புணர்வு ஏற்படுத்து
உனது கிராமத்தில், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்தாலோ, அல்லது குழந்தைகளுக்கு இளவயதில் திருமானம் நடந்தாலோ, பெரியோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தாலோ எனக்கு நீ கடிதம் மூலம் தெரியப்படுத்து. அல்லது கட்டணமில்ல தொலை பேசி எண் 1098 தகவல் சொல்லு... அல்லது என்னுடைய செல்போனில் 94441 61000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு “நீ” எனக்கு தகவல் சொல்லலாம். அல்லது குறுந்தகவலில் செய்தி அனுப்பலாம். உன்னுடைய பெயர் விபரங்களை ரகசியமாக நான் வைத்துக்கொள்வேன்.
உன்னைப்போல படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் திருமானம் செய்விக்க நினைத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற என்னம் உனக்கு வரவேண்டும்.
அரசே ஏற்றுக்கொள்ளும்
ஒரு வேளை பாதிக்கப்படும், அந்த பெண்ணுக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீ கவலைப்பட வேண்டாம்... அந்த பெண்ணின் கல்வி, விடுதி வசதி, வேலைவாய்ப்பு, வாழ்வதற்கு தேவையான எல்லா விதமான ஆலோசனைகளையும் அரசே செய்து கொடுக்கும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் கலெக்டர் லில்லி.
கிட்டத்தட்ட 60 ஆயிரம் மாணவியர்களுக்கு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications