முல்லைப் பெரியாறு அணைக்காக தற்கொலை செய்த தேமுதிக பிரமுகர் உடலுக்கு ஓ.பி.எஸ் அஞ்சலி
தேனி: முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி விருத்தாச்சலத்தில் உள்ள விடுதியில் தங்கி தற்கொலை செய்து கொண்ட தேமுதிக தலைமைக் கழக பேச்சாளர் சேகரின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுபப்டி ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் சேகரின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிக தலைமைக் கழக பேச்சாளராக இருந்து வந்தார். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மனம் உடைந்த அவர் விஜயகாந்த் முதன் முதலி்ல வெற்றி பெற்ற விருத்தாச்சலத்திற்கு வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மேனகா என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
சேகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சேகர் வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவித்து நிதியுதவியை குடும்பத்தாரிடம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி சேகர் வீட்டுக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி நிதியுதவியையும் அளித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications