'மகிழ்ச்சி பொங்கட்டும்!' - ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து:
உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட உவகை பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் எனதருமை கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.
இயேசுபிரான் அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய திருமகன். இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன். அவர் அன்பை போதித்தார். அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணம் ஆக்கினார்.
அன்பு வார்த்தையாலும் அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம் இந்த இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக் கவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.