வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்: தமிழகத்தில் மேலும் மழை!

வட கிழக்குப் பருவமழைக்குப் பின் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனால் சமூக விரோதிகளும் நில ஆக்கிரமிப்பாளர்களும் சில பகுதிகளில் சதி செய்து ஏரிகளை உடைத்துவிட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு திருப்திபடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதேநேரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இரவுகளில் 19 டிகிரி வரை குறைவான வெப்ப நிலை உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.
இந்த நிலையில், இப்போது மீண்டும் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "தென்வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று தென்மேற்கு வங்க கடலில் நோக்கி நகர்கிறது. எனவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். ஆனால் இந்த மழை உடனடியாக வராது. நாளை மழைப் பெய்ய வாய்ப்புள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications