செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு உதவி- நாசா விஞ்ஞானி தகவல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஆராய்ச்சிக்காக மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் முயற்சிக்கு நாசா உதவி செய்யும் என்று விஞ்ஞானி அந்தோணி ஜீவன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி காமராஜர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பில் ‘வருங்கால தலைமுறைக்கான சவால்களும், எதிர்பார்ப்புகளும் நாசாவின் பார்வையில்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை இணை பேராசிரியர் நாகராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மைய விஞ்ஞானியுமான அந்தோணி ஜீவன்ராஜ் கருத்தரங்கில் பேசியதாவது, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் வரை ஆளில்லா விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆள் இல்லா விண்கலத்தில் ஹெப்லாஸ் என்ற தொலைநோக்கி மற்றும் அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன கருவிகள் முலம் செவ்வாய் கிரகம் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய கிரகங்கள் பற்றி போட்டோ தகவல்களை அது நாசா மையத்திற்கு அனுப்பி வைக்கும்.

இந்தியாவுக்கு உதவி

இந்த ஆள் இல்லா விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பங்கள் மற்றும் பூமி பற்றிய பல ஆராய்ச்சிகளுக்கு அது மிகவும் பயன் உள்ளதாக அமையும். செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக மனிதனை அனுப்புவதற்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் இந்த சவாலான முயற்சிக்கு நாசா உதவி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+