பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பாராளுமன்றக் குழு அமைப்பு - ராமதாஸ் வரவேற்பு
சென்னை: பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தனி நாடாளுமன்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எனினும் பிற பிறபடுத்தப்பட்டோரின் நலன்களை பாதுக்காக்க இது மட்டுமே போதுமானது அல்ல. பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமானால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசை கட்டுபடுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசியல் சட்ட அதிகாரம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை இன்னும் 5 சதவீதம் கூட தாண்டவில்லை. உயர் பதவிகளில் இருக்கும் உயர் ஜாதியினர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து கொள்வது தான் இதற்கு காரணம்.
இந்த குறையை போக்கி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடஒதுக்கீ்ட்டில் தொகுப்பு ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதனை உடனடியாக செயல்படுத்தவும், வன்னிய சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் 2 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications