முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பிரதமரிடம் இன்று ஜெயலலிதா நேரில் முறையீடு

பிரதமர் மன்மோகன் சிங் சென்னை மற்றும் காரைக்குடியி் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று மாலை 7 மணியளவில் சென்னை வரும் அவர் இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார்.
விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போதுமுல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி முறையிடவுள்ளார்.
கேரளாவில் தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் கேரளத்தின் பிடிவாதம் குறித்தும் அவர் பிரதமரிடம் புகார் செய்யவுள்ளார்.
இதேபோல உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் அவர் பிரதமரிடம் நேரில் எதிர்ப்பு தெரிவிக்கபள்ளார்.
இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நாளை காலை 10 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு அரங்கில் நடைபெறும் கணிதமேதை ராமானுஜத்தின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சி சென்று அங்கிருந்து காரைக்குடி பயணப்படுகிறார். அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுஜம் ஆய்வு மையத்தை அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் இன்னொரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருச்சி திரும்பி அங்கிருந்துடெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications