திருச்சி அல்லது மதுரையில் பாஜகவின் 5வது மாநில மாநாடு: பொன்.ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பாஜகவின் 5வது மாநில மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பாஜகவின் 5வது மாநில மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாநாட்டை மதுரையில் நடத்தவே பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கவிருக்கிறோம். இதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
முன்னதாக மாநில மாநாட்டுக்காக மதுரையில் உள்ள சுற்றுச்சாலை, கல்லூரி மைதானம் உள்ளிட்ட இடங்களை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications