பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான 20 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம்
திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் நாடார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வந்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது குடும்பத்தினர் 22 பேர் மற்றும் தனது கடையில் வேலை பார்க்கும் 20 வயது ஊழியை அனிதா ஆகியோருடன் பழவேற்காடு சென்றார். அங்கு படகு சவாரி செய்தபோது படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஏரியில் மூழ்கி படகில் இருந்த 22 பேர் உயிரிழந்தனர்.
சுந்தரபாண்டியனின் பேரன்களான ஜனகராஜ், பவுன்ராஜ், பால் தினகர் ஆகியோரும், படகோட்டி அன்சாரியும் மட்டும் உயிர் தப்பினர். அன்சாரியின் மனைவி நசீரா பானுவும் நீரில் மூழ்கி பலியானார். அன்சாரிக்கும், நசீராவுக்கும் திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரே நொடியில் ஜல சமாதியானது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நீரில் மூழ்கி இறந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அனிதாவின் உடல் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
மீ்ட்கப்பட்ட நசீராவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல சுந்தரபாண்டியன் குடும்பத்தாரின் 20 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து 20 உடல்களும் கும்மிடிப்பூண்டி, கோரிமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
முன்னதாக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள செயின்ட் பால் சர்ச்சில் பிரார்த்தனைக்காக உடல்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல்கள் கோரிமேடு கொண்டு செல்லப்பட்டு அடககம் செய்யப்பட்டன.
இதேபோல நசீரா பானுவின் உடல் ஜாமியா பள்ளிவாசல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நசீராவின் கணவரான படகோட்டி அன்சாரிக்கு போலீஸார் ஜாமீன் அளித்திருந்தனர். அவரும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications