'தானே' புயலாக மாறியது காற்றழுத்தம்- வட மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

மேலும் நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2வது கட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக வட தமிழகத்திலும், புதுவையிலும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அது மெதுவாக வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. அப்புயலுக்கு தானே என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் தற்போது சென்னையிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் நகர்ந்து வட மேற்கில் நகர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு வட கிழக்கில் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தமானுக்கு 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது மேலும் நகர்ந்து மேற்கு வட மேற்கில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில், கடலூர் மற்றும் நெல்லூர் இடையே 30ம் தேதி அதிகாலையில் கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகள், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக இன்று மணிக்கு 75 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். 28ம் தேதி மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், 29ம் தேதி 90 முதல் 110 கி.மீ வேகத்திலும், 30ம் தேதி 65 முதல் 85 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முதல் புயல்
நடப்பு வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் உருவாகியுள்ள புயல் இந்த தானே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications