அதிமுக, திமுகவால் சீரழிந்துவிட்டோம்: நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸ் கண்ணீர்
சேலம்: திராவிடக் கட்சிகளால் நாம் சீரழிந்துவிட்டோம் என்று கூறி பாமக தலைவர் ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கண்ணீர் விட்டார்.
பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
அதிமுக, திமுகவுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தான் சீரழிந்துவிட்டோம். இது தவிர போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி, மாறி ஓடி நீங்கள் தான் முதல்வர், நீங்கள் தான் முதல்வர் என்று அவர்களுக்கு காவடி எடுத்து தான் இந்த நிலையில் உள்ளோம். அதனால் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 25, 25 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தது போக தற்போது இந்த அவல நிலையில் உள்ளோம்.
இனி வரும் காலத்தில் பாமகவின் தனித்தன்மையைக் காப்போம் என்று கூறி கண்ணீர்விட்டார்.
இதைப் பார்த்த நிர்வாகிகள் தலைவர் இவ்வளவு வேதனைப்படுகிறாரா என்று உருகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications