சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி, இருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ரோல் கேப் தயாரிப்பதற்காக வெடிமருந்துகளை உலர வைக்கும் பணி நடைபெற்றது. ரோல் கேப்புகளை துண்டுகளாக கத்தரிப்பதற்காக எடுத்த போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த அறை இடிந்து தரைமட்டமானது. இதில் ஆலையில் பணியாற்றிய முருகேசன் பிள்ளை, சங்கரலிங்கம், சுந்தரராஜ், மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் தர்மர் மற்றும் மாரியப்பன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications