முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தேனி: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக தேனி அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் உள்பட மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிலர் மனமுடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். உயிருக்குப் போராடிய அவரை சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். இதேபோன்று கடந்த வாரம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.மேலும் தேனி அருகே உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்த இடிமுழக்கம் சேகர் என்பவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
நேற்று மதுரையில் வழக்கறிஞர்கள் இருவர் உயரமான கட்டிட உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். அப்போது அவர்களை மதுரை கலெக்டர் சகாயம் சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியை கைவிடச் செய்தார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications