முல்லைப் பெரியாறு விவகாரம்: ஜனவரி 6ல் திருவனந்தபுரம்- குமரிக்கு சிவசேனா சமாதான ஊர்வலம்
நாகர்கோவில்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளக் கோரி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிவசேனா கட்சி சார்பில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி சமாதான ஊர்வலம் நடைபெற உள்ளது.
இது குறித்து நாகர்கோவிலில் சிவசேனா தென்இந்திய தலைவரும், கேரள மாநில தலைவருமான புவனச்சந்திரன், தமிழ்நாடு சிவசேனா தலைவர் சிதறால் ராஜேஷ், பொதுச்செயலாளர் சிவாஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு பிரச்னையை தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்படக் கூடாது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சமாதான நல்லிணக்க ஊர்வலம் நடைபெற உள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications