தண்டவாளங்களை சேதப்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: ஐ.ஜி. சுனில்குமார்
திண்டுக்கல்: ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்துபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே ஐ.ஜி.சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ரயில்வே ஐ.ஜி.சுனில்குமார் திடீர் என்று ஆய்வு நடத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்துபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ராஜபாளையத்தில் ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்திய 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே நிலையங்களிலும் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் போலீசார் இணைந்து கண்காணிப்பார்கள். பயணிகள் தங்களது புகாரை ரயில் நிலையங்களில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்கலாம். புகாரை பெற்றுக் கொண்ட பிறகு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications