தளவாய் சுந்தரம் நீக்கம்-விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கம்

சசிகலாவின் நீக்கத்தையடுத்து அதிமுக கட்சி நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றி வருகிறார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.தளவாய் சுந்தரம் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் திடீர் நீக்கம்:
அதே போல விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் சிலரையும் நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக விவசாயப் பிரிவு செயலாளர் கே.கே.சிவசாமி, விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கே.பால்சாமி, வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஜி.ராமசாமி, செயலாளர் ஆர்.சேதுபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் கே.முனியசாமி, திருச்சுழி ஒன்றிய செயலாளர் பி.போத்திராஜ், திருத்தங்கல் நகர அவைத் தலைவர் எஸ்.மைக்கேல்ராஜ், செயலாளர் வி.சரவணக்குமார், பொருளாளர் சி.ராமர் உள்ளிட்டோர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
மேலும் ராஜபாளையம் நகர செயலாளர் ஏ.பி.முத்துகிருஷ்ண ராஜா, ராஜபாளையம் தொகுதி செயலாளர் எம்.ஜெயராமன், விருதுநகர் தொகுதி செயலாளர் எஸ்.வி.பி.ரவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நக்கமங்கலம் கிளை செயலாளர் கே.காளிமுத்து, நரிக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.சி.பிரபாத், விவசாய பிரிவு செயலாளர் கே.சுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இரு்நது விடுவிக்கப்படுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கழக செயலாளர் ஜி.சந்திரசேகரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார், என்று அந்த அறிக்கையி்ல் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications