For Daily Alerts
Just In
5 மாநில தேர்தல்-மத்திய பட்ஜெட் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைப்பு?
டெல்லி: 5 மாநில சட்டமன்றத் தேர்தலைகளையொட்டி மத்திய பட்ஜெட் பிப்ரவரிக்குப் பதிலாக மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்னதாக ரயில்வே பட்ஜெட்டும், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
இதற்காக டிசம்பர் மாதம் முதலே பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கி விடும். அந்த வகையில் தற்போதும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
ஆனால் உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளன.
இதையடுத்து பட்ஜெட்டை பிப்ரவரிக்குப் பதிலாக மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
English summary
The central government is likely to postpone the presentation of the General as well as the Railway Budget 2012-13 in the ongoing session of Parliament in view of the elections in five states. Both budgets are likely to be presented in the second week of March 2012.
Story first published: Thursday, December 29, 2011, 15:41 [IST]