சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்-பகுஜன் சமாஜ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்பாலில் மட்டுமல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கோரியுள்ளது.

லோக்பாலில் இட ஒதுக்கீடே கூடாது என்று பாஜக கூறி வருகிறது. இந் நிலையில் இந்த மசோதா மீது ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த எம்பியான சதீஷ் சந்திர மிஸ்ரா,

சிபிஐ அமைப்புக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும். இந்த அமைப்பின் மீது மத்திய அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது.

சிபிஐ அமைப்பை முதலில் தனக்கு வசதியான வகையில் பயன்படுத்தியது பாஜக தலைமையில் இருந்த மத்திய அரசு தான். அதைத் தான் காங்கிரஸ் தலைமையிலான அரசு இப்போது தொடர்ந்து கொண்டுள்ளது.

இட ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக வந்துவிடக் கூடாது என்றே ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+