லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது- பாஜக

ராஜ்யசபாவில் இன்று தாக்கலான இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய பாஜக தலைவர் அருண் ஜேட்லி,
லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. யாருமே ஏற்க முடியாத ஒரு லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அரசியல் சட்டத்தையே சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ அமைப்பை தனிப்பட்ட, சுதந்திரமான அமைப்பாக இயங்க வைக்கும் வகையில் லோக்பாலில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இப்போதுள்ள லோக்பாலின் கீழ், பிரதமரை விசாரிப்பது என்பது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது.
இந்த லோக்பால் மசோதா மூலம் அரசியல் சட்ட காக்டெய்லை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
பாஜக வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது. லோக்பால் மசோதாவிற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்குவதை பாஜக எதிர்க்கவில்லை. லோக்பால் மசோதாவை, அரசு விளையாட்டுப் பொம்மையாகவே பார்க்கிறது, அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மத்திய அரசு, அரை மனதுடனே இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications