கன மழையில் சிக்கிய சீர்காழி- நாகை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிப்பு!
Subscribe to Oneindia Tamil

தானே புயல் எதிரொலியாக பெய்து வரும் கன மழையால் கடலோர மாவட்டமான நாகையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பெய்து வரும் கன மழையால், சீர்காழி நகரம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சீர்காழியிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மயிலாடுதுறை-காரைக்கால் இடையிலான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 9 செ.மீ. மழை பதிவு:
தானே புயல் புதுச்சேரி-கடலூர் இடையே கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் மட்டும் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications