'பெத்த' பேரு -விலை போகாத சிரஞ்சீவி!
ஆந்திராவை தெலுங்கானா சூறாவளி தாக்குவதற்கு முன்பு பெரும் புய��ாக அந்த மாநிலத்தை பயமுறுத்தியவர் சிரஞ்சீவி. பெரும் ஆரவாரத்துடன் அரசியலுக்கு வந்து அதே வேகத்தில் அடிபட்டுப் போனவர் இந்த மெகா ஸ்டார்.
என்.டி.ராமாராவுக்குப் பிறகு பெரும் புயலைக் கிளப்பிய அரசியல்நடிகர் சிரஞ்சீவிதான். இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. திருப்பதியில் வரலாறு காணாத கூட்டத்தைக் கூட்டி பிரஜா ராஜ்ஜியம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் சிரஞ்சீவி. இதே வேகத்தில் இவர் போனால் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று அனைவரும் கூறினர்.
ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தல் களத்தில் சிரஞ்சீவி புயல் மண்ணைக் கவ்வியது. கரையைத் தொடாமலேயே கலைந்து போனது. சொற்ப இடங்களிலேயே அவரால் வெல்ல முடிந்தது. தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட அவரால் வெல்ல முடியவில்லை.
இதையடுத்து கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸில் ஐக்கியமாக முடிவெடுத்தார் சிரஞ்சீவி.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி டெல்லி வந்த அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஐக்கியத்தை உறுதி செய்து பகிரங்கமாக அறிவித்தார்.
இப்படி ஆந்திராவை உலுக்கிய அரசியல் -சினிமா புயல் சிரஞ்சீவி சத்தமில்லாமல் ஒடுங்கிப் போன ஆண்டு 2011.












Click it and Unblock the Notifications