புத்தாண்டு: 'சமத்துப் பிள்ளைகள்' ராசா, கல்மாடிக்கு மட்டும் ஸ்பெஷல் உணவு!

திகார் சிறையில் சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். அதில் 2ஜி வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், காமென்வெல்த் ஊழல் வழக்கில் கைதான காமென்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியும் அடக்கம். சிறையில் அத்தனை பேர் இருந்தும் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு தங்கள் நண்பர்கள், உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
அந்த 2 பேர் வேறு யாருமில்லை ஆ.ராசவும், கல்மாடியும் தான். இது மட்டுமின்றி அந்த 2 விஐபி கைதிகளுக்கு மட்டும் பரோட்டா, புலாவ், பன்னீர், கீர், அல்வா, பூரி மற்றும் இனிப்பு வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறை விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுங்காக நடந்து கொள்பவர்களுக்கு புத்தாண்டில் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்க அனுமதிப்போம் என்றனர்.
அப்படி என்றால் திகாரில் ஒழுங்காக நடந்து கொள்ளும் கைதிகள் ராசாவும், கல்மாடியும் மட்டும் தான் போல் இருக்கின்றது.












Click it and Unblock the Notifications