Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கு சப்ளையான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்- போலீசார் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் சப்ளை செய்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்து்க்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக எஸ்பி ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி சோனல்சந்திரா, இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பின்புறம் முட்புதரில் போதை பொருள் பரிமாற்றம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சந்தேகத்துக்கு இடமா வகையில் சுற்றிக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சர்வதேச மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பாத்திமாநகர் 6வது தெருவை சேர்ந்த அந்தோணி மைக்கேல் இன்னாசி, யாசர் அரபாத், விஜயகரன், தங்கமதன் என தெரியவந்தது. இதில் தங்கமதன் பாலிடெக்னிக் மாணவன். ஹெராயின் வியாபாரியான சந்திரபோசிடம் இருந்து ஹெராயின் வாங்கி மாணவர்களுக்கு சப்ளை செய்துள்ளனர். ஏசி மெக்கானிக்கான யாசர் அரபாத் ஏற்கனவே திருட்டு விசிடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+