முல்லைப் பெரியாறுடன் தொடர்புடைய இடைத்தேர்தலை அறிவிக்கக் கோரி கேரளாவில் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

Piravom
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பிரவம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் உடனே அறிவிக்கக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பிரவம் தொகுதியைச் சேர்ந்த ஜோய் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

பிரவம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த டிஎம் ஜேக்கப் மரணம் அடைந்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். சமீபத்தில் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் பிரவம் தொகுதி தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. எனவே பிரவம் தொகுதிக்கான தேதியையும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் கேரள அரசியல் கட்சிகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை பெரிதாக்கி ஊதி வருகின்றன என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி விட்டால் அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தற்போது பிரவோம் தொகுதி காலியாகி 2 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தக் கோரி அங்கு வழக்கு தொடரப்பட்டிருப்பது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் எழுந்துள்ள சூழலைப் பயன்படுத்த அங்குள்ள கட்சிகள் துடிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+