5 மாநில தேர்தல்- பெட்ரோல் விலை உயர்வை ஒத்திவைத்த மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவும் அதிகரித்துவிட்டதாகக் கூறி பெட்ரோல் விலையை ரூ. 2.10 முதல் ரூ. 2.13 வரை உயர்த்த மத்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.
இதனால் இப்போதைக்கு பெட்ரோல் விலை உயராது.
பெட்ரோல் விலை உயர்வு நேற்றிரவு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை.
ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.78 வரை உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கூறி வருகின்றன.












Click it and Unblock the Notifications