விஜயகாந்த் வழங்கிய போர்வை, புடவையை வாங்க முண்டியடித்த மக்கள்- 15 பேர் காயம்!

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
கடலூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரணப் பொருட்களை வழங்கியபோது கூட்டம் முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 15 பேர் படுகாயம் அடைய நேரிட்டது.

கடலூர் புதுப்பாளையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு காணப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் அங்கு வந்து புடவை, போர்வைகளை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கத் தொடங்கினார். இதையடுத்து அவற்றை வாங்க மக்கள் முண்யடித்தனர். இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

இந்த தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவையில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்த்தார்

பின்னர் கடலூர் பயணத்தை முடித்துக் கொண்ட விஜயகாந்த் புதுச்சேரி சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட ரெட்டியார்பாளையம், உழவர்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+