புயல் பாதித்த கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் கருணாநிதி நாளை ஆய்வு

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதியிலும் மற்றும் தானே புயலாலும், கடும் மழையினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பகுதியிலும் புதுச்சேரியிலும் கடும் சேதத்திற்கு உள்ளான இடங்களை பார்வையிடவும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக ஆற்ற வேண்டிய நிவாரண பணிகளை எடுத்துக்கூறி அரசின் மூலம் வழிவகுக்கவும்,
எந்த உதவியும் அற்று, அல்லல்படும் ஏழை எளிய மக்களுக்கு ஆங்காங்கு உள்ள தி.மு.க. அமைப்புகளின் சார்பாக துணைபுரிவதற்கான வழிவகைகளை காணவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி புதன்கிழமை காலை முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இன்னும் புயல் பாதித்தை பகுதிகளை நேரில் சென்று பார்வையிடாத நிலையில் முன்னாள் முதல்வரான கருணாநிதி நேரில் சென்று பார்வையிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications