For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வு: பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

SSLC Exam
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது

தேர்வு அட்டவணை விவரம் வருமாறு,

4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்

இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
SSLC exam will start from april 4 and end on 23rd of the same month in Tamil Nadu. This year nearly 11 lakh students write the SSLC exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X