90 பேர் உயிரைக் குடித்த வழக்கில் இமாமி நிறுவன இயக்குநருக்கு ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 90 பேர் உயிரைக் குடித்த ஆம்ரி மருத்துவமனை தீ விபத்து வழக்கில் இமாமி நிறுவன இயக்குநர் ஆர் எஸ் கோயங்கா, ஷ்ராச்சி நிறுவன தலைவர் டோடி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதிகாலை கொல்கத்தாவின் ஆம்ரி மருத்துவமனைல் ஏற்பட்ட தீ விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆம்ரி நிறுவனத்தின் இயக்குநர்களான எஸ்கே டோடி, ரபி டோடி, ஆர் எஸ் கோயங்கா, பிரஷாந்த் கோயங்கா, மணீஷ் கோயங்கா, தயானந்த் அகர்வால் ஆகிய 6 பேர், மற்றும் மருத்துவமனையின் இரு அலுவலர்களை மேற்கு வங்க போலீஸ் கைது செய்தது.

இவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அலிப்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஆர் எஸ் கோயங்கா இமாமி நிறுவன இணைத் தலைவர். எஸ்கே டோடி ஷ்ராச்சி நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்துதான் ஆம்ரி மருத்துவமனையை நிறுவின.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று அலிப்பூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் விசாரணைக்கு வந்தனர்.

ஆம்ரி மருத்துவமனை இயக்குநர்கள் 6 பேரும் பல்வேறு நோய்களால் வாடுவதாகவும், எனவே அவர்களுக்கு ஜாமீன் தர வேண்டும் என்றும் அவர்களின் வக்கீல்கள் வாதிட்டனர். யாரையும் ஜாமீனில் விட முடியாது என்றும், நீதிமன்றக் காவலை வரும் ஜனவரி 19-ம் தேதி வரை நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+