பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு பணி 3 மாதங்களில் தொடங்கும் - வேலாயுதன் நாயர்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவின் புதிய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ரூ.பல கோடி மதிப்புள்ள இந்த பொக்கிஷங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.
இந்த நிலையில் கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் ஐவர் குழுவின் புதிய தலைவராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது. அவர் தலைமையிலான குழு வரும் 3 மாதங்களில் மதிப்பீடு பணிகளை தொடங்க உள்ளதாக வேலாயுதன் நாயர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து என்.வேலாயுதன் நாயர் கூறியதாவது,
பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பீட்டு பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும். இதற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் நடந்து வருகின்றது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்நுட்ப குறைபாடுகளால் மதிப்பீடு குழுவால் செயல்பட முடியாமல் இருந்தது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தேவையான உபகரணங்கள் பெற்ற பிறகு பணிகள் 3 மாதங்களில் தொடங்கும். மதிப்பீடு பணியின் போது பொக்கிஷங்களுக்கு சேதமடையாத வகையி்ல் நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச பொருட்காட்சியம் சங்கத்தின் சட்டத் திட்டங்கள் பின்பற்றப்பட உள்ளது, என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications