பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் மதிப்பீடு பணி 3 மாதங்களில் தொடங்கும் - வேலாயுதன் நாயர்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவின் புதிய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ரூ.பல கோடி மதிப்புள்ள இந்த பொக்கிஷங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.
இந்த நிலையில் கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் ஐவர் குழுவின் புதிய தலைவராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது. அவர் தலைமையிலான குழு வரும் 3 மாதங்களில் மதிப்பீடு பணிகளை தொடங்க உள்ளதாக வேலாயுதன் நாயர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து என்.வேலாயுதன் நாயர் கூறியதாவது,
பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பீட்டு பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும். இதற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் நடந்து வருகின்றது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்நுட்ப குறைபாடுகளால் மதிப்பீடு குழுவால் செயல்பட முடியாமல் இருந்தது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தேவையான உபகரணங்கள் பெற்ற பிறகு பணிகள் 3 மாதங்களில் தொடங்கும். மதிப்பீடு பணியின் போது பொக்கிஷங்களுக்கு சேதமடையாத வகையி்ல் நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச பொருட்காட்சியம் சங்கத்தின் சட்டத் திட்டங்கள் பின்பற்றப்பட உள்ளது, என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications