கடலூரில் நிவாரணத்தில் ஊழல்- பண்ருட்டி தேமுதிக எம்எல்ஏ உண்ணாவிரதம்
பண்ருட்டி: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத்தில் அதிகாரிகள் ஊழல் செய்து வருவதை கண்டித்து தேமுதிக எம்.எல்.ஏ. சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து உள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கியதில் பலத்த சேதமடைந்தது. இதனால் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் புயல் சேத மதிப்பீட்டில் ஆளுங்கட்சியின் தலையீடு, பணம் வழங்குவதில் அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை.
போனில் தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதில்லை. புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ரூ.5000 அறிவித்தார். ஆனால் பொது மக்களுக்கு வெறும் ரூ.2500 மட்டுமே வழங்கப்படுகிறது என்று பண்ருட்டி தேமுதிக எம்.எல்.ஏ.சிவக்கொழுந்து குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சேகர் உள்ளிட்ட பலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் கூட அதிகாரிகள் கையால் செய்துள்ள சம்பவம் தமிழகத்தை தலைக்குனிய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications