புயல் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள்-ஜெ. வேண்டுகோள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தானே புயலினால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சேதமடைந்துள்ளது, 4லட்சம் குடிசைகளும், 2 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன.
புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து 5,249 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் புயல் நிவாரண நிதியை தாரளமாக வழங்கலாம்.
காசோலை, வரைவோலை
நிவாரண நிதியை குறுக்கு கோடிட்ட காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு அனுப்பலாம். நிதி வழங்குபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
காசோலை அனுப்ப வேண்டிய முகவரி: அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்: முதலமைச்சர் பொதுநிவாரணநிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. நன்கொடையாளருக்கு அலுவல் முறை ரசீது அனுப்பி வைக்கப்படும். மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications