பிப். 1ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சோப்பு, சீயக்காய், ஷாம்பு போட்டு குளிக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: பிப்ரவரி 1ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சோப்பு, சீயக்காய், ஷாம்பு போட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் குற்றாலம் பேரூராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
குற்றாலம் பேரூராட்சிக் கூட்டம் இன்று நடந்தது.அப்போது குற்றாலம் அருவிகளில் குளிப்பது தொடர்பாக பல புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அன் இறுதியில், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இனிமேல் குளிப்பவர்கள் சோப்பு, சீயக்காய், ஷாம்பு உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், குளிக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியை விரிவுபடுத்தும் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் அதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications