ஆவின் ஊழியர்களுக்கு ரூ.2.6 கோடி பொங்கல் போனஸ்: ஜெயலலிதா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.2.6 கோடி செலவாகும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 7,127 பேருக்கும், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் 21,000 தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு ரூ.2.6 கோடி செலவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications