ரயில் கட்டணம் உயராது: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவிப்பு
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் உயராது என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நிதியைப் பெருக்க விலையேற்றம் ஒரு தீர்வாகாது. நாம் ஏழை, எளிய மக்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். ரயில்வே உள்கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும். இந்த துறையை பாதுகாப்பானதாக ஆக்க அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும். புதிய திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை இருப்பதால் பல திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே துறையில் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு கட்சி ஆட்சியில் உள்ளபோது கொண்டு வரும் திட்டம் அடுத்த கட்சியின் ஆட்சியில் நிறுத்திவைக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒரு ரயில்வே அமைச்சர் தனது காலத்தில் ஒரு கொள்கையைக் கொண்டு வருகிறார். அடுத்த அமைச்சர் வரும்போது அந்த கொள்கையை தூக்கிப்போட்டுவிட்டு புதுக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications