அத்வானி, மோடி வருகை – போக்குவரத்து நெருக்கடி : திணறிய சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை : பாஜக மூத்த தலைவர் அத்வானி, மோடி ஆகியோரின் சென்னை வருகையை ஒட்டி கிண்டி – மீனம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக , பாஜக மூத்த தலைவர் அத்வானி, மோடி ஆகியோர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்தனர். இரண்டு முக்கிய தலைவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு கருதி கிண்டி – மீனம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் தேங்கின. இதனால் பொங்கல் பண்டிகைக்காக பொருட்களை வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்த பொதுமக்கள் சாலையில் காத்திருக்க நேரிட்டதால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications