தானே புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் 26,000 கூடுதல் மின் கம்பங்கள் வரவழைப்பு
சென்னை: தானே புயல் தாக்குதலில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் வகையில், வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக 26,000 மின் கம்பங்கள் வரவழைக்கப்பட உள்ளது.
தானே புயலின் தாக்குதலில் சிக்கிய கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்தன. புயலில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் வயர்கள் உள்ள மின் சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்தன. இதனால் மாவட்டங்களில் மின்சாரமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக மின்சார வாரிய பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர். அதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 21,662 மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
சீரமைப்பு பணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக 26,000 மின் கம்பங்களை பெற தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications