மதுரை மாநகராட்சியில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் அபேஸ்
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருட்டுப் போன கம்ப்யூட்டரில் தான் மண்டலம் 1ன் வரி விதிப்பு தொடர்புடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இதில் வரிவிதிப்பு தொடர்பான பல்வேறு தகவல்களும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கம்ப்யூட்டர் மாயமானது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அதுவும் உதவி கமிஷனர் ரவீந்திரன், கம்ப்யூட்டர் பொறுப்பாளர் கருணாகரன் ஆகியோர் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் சந்தேகம் வலுத்துள்ளது. வரி செலுத்தாதவர்கள் உடனே வரியைச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களில் இந்த திருட்டு நடந்துள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் எத்தனையோ கம்ப்யூட்டர்கள் இருந்தும் குறிப்பாக வருவாய் பிரிவு கம்ப்யூட்டரை மட்டும் ஏன் திருட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications