மூழ்கும் இத்தாலிய கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்பு-5 பேர் பலி

இத்தாலியைச் சேர்ந்த சொகுசு கப்பல் காஸ்டா கன்கார்டியா கிக்லியோ தீவில் கடந்த 13ம் தேதி இரவு பாறையில் மோதி, தரை தட்டியது. அதன் பிறகு கடலில் மூழ்கத் துவங்கியுள்ளது. அதில் 4,000க்கும் அதிகமானோர் இருந்தனர். அதில் 300 சிப்பந்திகள் இந்தியர்கள். 300ல் 10 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒரு இந்தியர், 2 அமெரிக்கர்கள் உள்பட 15 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பத்திரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுமாறு இத்தாலிக்கான இந்திய தூதர் தேபபத்ரா சாஹாவுக்கு கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். 2 இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்கனவே மீட்பு பணி நடக்கும் இடத்தை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மூழ்கும் கப்பலில் இருந்த 300 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களில் யாரும் உயிர் இழக்கவில்லை என்றும் சாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த இந்தியரும் இறக்கவில்லை. மீட்கப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மீட்புப் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications